மது போதையில் இளைஞர்களுக்கு இடையே மோதல்


மது போதையில் இளைஞர்களுக்கு இடையே மோதல்
x

மது போதையில் இளைஞர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

புதுக்கோட்டை

ஆலங்குடி அண்ணா நகரில் 2 டாஸ்மாக் கடைகள் உள்ளது. இதில் ஒரு கடையில் நான்கு இளைஞர்கள் மது அருந்த சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அவர்கள் மது அருந்திக்கொண்டு இருக்கும் போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்குள்ளவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இவர்கள் 4 பேரும் பாத்தம்பட்டி சாலையின் நடுவே ஒருவரை ஒருவர் கத்தி, பீர்பாட்டில், உருட்டு கட்டையால் தாக்கி கொண்டனர். இதனால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் அனைத்து சாலையில் வரிசை கட்டி நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நதியா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசார் வருவதை பார்த்த 3 பேர் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதில் காயமடைந்த சிக்கப்பட்டி கிராமத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி மகன் பிரவீன்குமார் (வயது 26) என்பவரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story