காவிரி ஆற்றில் மூழ்கி 9-ம் வகுப்பு மாணவன் பலி


காவிரி ஆற்றில் மூழ்கி 9-ம் வகுப்பு மாணவன் பலி
x

குளித்தலையில் காவிரி ஆற்றில் மூழ்கி 9-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான்.

கரூர்

9-ம் வகுப்பு மாணவன்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மேலதாளியாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி ஜோதி. இந்த தம்பதியின் மகன் தீபக் (வயது 14). இவன், வேங்காம்பட்டியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

ஜோதியின் உறவினரின் மகன் கடந்த ஆண்டு இறந்துள்ளார். அவருக்கு சாங்கியம் செய்வதற்காக உறவினர்கள் அனைவரும் குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்றங்கரைக்கு நேற்று வந்துள்ளனர். அனைவரும் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது தீபக்கும் ஆற்றில் இறங்கி குளித்தபோது, திடீரென தண்ணீரில் மூழ்கி தத்தளித்தான்.

சாவு

இதைக்கண்ட அருகில் குளித்து கொண்டிருந்தவர்கள், ஆற்றில் மூழ்கிய தீபக்கை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீபக்கை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து தீபக்கின் உடல் பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஜோதி கொடுத்த புகாரின்பேரில், குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story