ஜூலை 3-ம் தேதி முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படும் - உயர்கல்வித்துறை அறிவிப்பு


ஜூலை 3-ம் தேதி முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படும் - உயர்கல்வித்துறை அறிவிப்பு
x

ஜூலை 3-ம் தேதி முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

சென்னை,

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் இதுவரை 75,811 மாணவர்கள் அரசு கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலைக் கல்லூரிகளில் மொத்தம் 1,07,299 மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 75811 மாணவர்கள் முதலாம் ஆண்டில் சேர்க்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீதமுள்ள இடங்களுக்கு இன சுழற்சி முறையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

ஜுன் 30, 2023 வரை முதலாமாண்டு மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெறும். முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரி 2023 ஜூலை 3 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று உயர்க்கல்வித்துறை தெரிவித்துள்ளது.


Next Story