ஆனைமலையில் விஷம் குடித்து கிளீனர் தற்கொலை


ஆனைமலையில் விஷம் குடித்து கிளீனர் தற்கொலை
x
தினத்தந்தி 3 Jan 2023 12:15 AM IST (Updated: 3 Jan 2023 12:47 PM IST)
t-max-icont-min-icon

ஆனைமலையில் விஷம் குடித்து கிளீனர் தற்கொலை

கோயம்புத்தூர்

ஆனைமலை

ஆனைமலை பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 50). கிளீனர். இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால் அவருக்கும், அவரின் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதன்காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி கோபித்துக்கொண்டு அவரின் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் லோகநாதன் தனியாக வசித்து வந்தார். சம்பவத்தன்று லோகநாதன் விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆனைமலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி லோகநாதன் பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story