மண்எண்ணெய் பாட்டிலுடன் வந்த மாற்றுத்திறனாளி துப்புரவு பணியாளர்


மண்எண்ணெய் பாட்டிலுடன் வந்த மாற்றுத்திறனாளி துப்புரவு பணியாளர்
x

தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு மாற்றுத்திறனாளி துப்புரவு பணியாளர் மண்எண்ணெய் பாட்டிலுடன் வந்தார். அவரை வாசலில் தடுத்து நிறுத்தி போலீசார் பறிமுதல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு மாற்றுத்திறனாளி துப்புரவு பணியாளர் மண்எண்ணெய் பாட்டிலுடன் வந்தார். அவரை வாசலில் தடுத்து நிறுத்தி போலீசார் பறிமுதல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

துப்புரவு பணியாளர்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கரைமீண்டார் கோட்டை ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 36). மாற்றுத்திறனாளியான இவர் கரைமீண்டார்கோட்டை ஊராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்தார்,இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு துரைராஜை வேலையில் இருந்து நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது.இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்ட போதும் அவருக்கு வேலை வழங்கப்படவில்லை. மேலும் அவர் பணத்தை திருடியதாக கூறி வேலையில் இருந்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.

வீண் பழி சுமத்தியதாக புகார்

தான் எந்தவித திருட்டிலும் ஈடுபடாத நிலையில் தன்மீது வீண் பழி சுமத்தப்பட்டு வேலையில் இருந்து நிறுத்தியதாக கூறி இது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் ஏற்கனவே 2 முறை மனு கொடுத்துள்ளார். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் மனமுடைந்த துரைராஜ் நேற்று மண்எண்ணெய் பாட்டிலுடன் தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.கலெக்டர் அலுவலக வாசலில் வந்த போது அங்கு பாதுகாப்பு பணியில் போலீசார் அவரை தடுத்து நிறுத்திய போது அவரிடம் மண்எண்ணெய் பாட்டில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பாட்டிலை போலீசார் பறிமுதல் செய்தனர்.பின்னர் துரைராஜை, கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக அழைத்துச்சென்றனர். அவர் கலெக்டரிடம் மனு கொடுத்தார். அதில் தன்மீது திருட்டுபட்டம் கட்டி வீண்பழி சுமத்தி வேலையில் இருந்து நிறுத்தி உள்ளனர்.எனவே எனக்கு மீண்டும் வேலை வழங்க உத்தரவிட வேண்டும்.என அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story