துாய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்ட கணக்கெடுப்பு முகாம்


துாய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்ட கணக்கெடுப்பு முகாம்
x
தினத்தந்தி 18 Oct 2023 12:15 AM IST (Updated: 18 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மானாமதுரை நகராட்சி சார்பில் துாய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்ட கணக்கெடுப்பு முகாம் நடந்தது.

சிவகங்கை

மானாமதுரை

மானாமதுரை நகராட்சி சார்பில் துாய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்ட கணக்கெடுப்பு முகாம் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற தலைவர் மாரியப்பன்கென்னடி தலைமையில் நடந்தது. ஆணையாளர் ரெங்கநாயகி முன்னிலை வகித்தார். தமிழக அரசு துாய்மை பணியாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்காக அவர்களுக்கான மேம்பாட்டுத்திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் தகுதியான தூய்மை பணியாளர்களை கண்டறிவதற்கான கணக்கெடுப்பு முகாமில் தரைமட்ட கழிப்பறைதொட்டியை தூய்மைப்படுத்தும், வாகனங்களில் பணிபுரிவோர், புதை சாக்கடை தூய்மை பணியில் ஈடுபடுவோர், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், சமுதாய, பொது கழிப்பிடங்களில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை இத்திட்டத்தின் கீழ் சேர்க்க ஆலோசனை வழங்கப்பட்டது. கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் வேல்முருகன், சண்முகப்பிரியா, துப்புரவு ஆய்வாளர் பாண்டிசெல்வம், துப்புரவு மேற்பார்வைகள் கார்த்தி, ஹரிணி, சிவராணி, பிரபு தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் காயத்ரி, பரப்புரையாளர்கள் மற்றும் துாய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Related Tags :
Next Story