தமிழர் திருநாள் நிறைவு விழா


தமிழர் திருநாள் நிறைவு விழா
x
தினத்தந்தி 21 Jan 2023 6:45 PM GMT (Updated: 21 Jan 2023 6:45 PM GMT)

தமிழர் திருநாள் நிறைவு விழா கொண்டாடப்பட்டது.

சிவகங்கை

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே கீழச்சிவல்பட்டி பாடுவார் முத்தப்பர் கோட்ட அரங்கில் 3 நாள் திருவிழாவாக தமிழர் திருநாள் கொண்டாடப்பட்டது. இதன் நிறைவு விழாவிற்கு சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். முன்னதாக சோலையப்பன் தமிழ் தொடக்கவுைர ஆற்றினார். இளங்கோவன், ஆரியப்பன், வள்ளியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவிஞர் நாகப்பன் வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து சொற்சிலம்பம், பாட்டு பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் நடுவராக பேராசிரியை சரஸ்வதி நாகப்பன் செயல்பட்டார். தமிழர் வாழ்வியலை தரமாக சொல்வது மக்களிசைப் பாடல்களா ?மெல்லிசை பாடல்களா? என்ற தலைப்பில் பேச்சாளர்கள் கருத்துக்களை எடுத்துக் கூறினர். தொடர்ந்து குருவிக்கொண்டான்பட்டி மீனாட்சி சொக்கலிங்கம் நடுநிலைப்பள்ளி, சிறுகூடல்பட்டி கலைமகள் வித்தியாசாலைப்பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை தமிழ்மன்ற செயலர்கள் பழனியப்பன், அழகுமணிகண்டன், விஸ்வநாதன், சீனிவாசன் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story