தர்மபுரி ஏல அங்காடியில்ரூ.24¼ லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை


தர்மபுரி ஏல அங்காடியில்ரூ.24¼ லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை
x
தினத்தந்தி 27 Feb 2023 7:00 PM GMT (Updated: 27 Feb 2023 7:00 PM GMT)
தர்மபுரி

தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்த அங்காடிக்கு நேற்று பட்டுக்கூடுகள் வரத்து வழக்கத்தை விட அதிகரித்தது. நேற்று 4,032 கிலோ பட்டுக்கூடுகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். பட்டுக்கூடு அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.646.34-க்கும், குறைந்தபட்சமாக ரூ.426-க்கும், சராசரியாக ரூ.601.56-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.24 லட்சத்து 25 ஆயிரத்து 500-க்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.


Next Story