ரூ.3¾ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்


ரூ.3¾ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
x

பரமத்தி வேலூரில் ரூ.3¾ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது.

நாமக்கல்

பரமத்திவேலூர்

பரமத்தி வேலூர் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் கடந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 3 ஆயிரத்து 123 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.77.69-க்கும், குறைந்தபட்சமாக ரூ.55.89-க்கும்‌, சராசரியாக ரூ.76.99-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.2 லட்சத்து 7 ஆயிரத்து 993-க்கு ஏலம் போனது. இந்தநிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 5 ஆயிரத்து 659 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.81.99-க்கும், குறைந்த பட்சமாக ரூ.58.99-க்கும், சராசரியாக ரூ.81.99-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.3 லட்சத்து 90 ஆயிரத்து 790-க்கு ஏலம் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story