உற்பத்தி அதிகரிப்பால் தேங்காய் விலை வீழ்ச்சி


உற்பத்தி அதிகரிப்பால் தேங்காய் விலை வீழ்ச்சி
x

சாணார்பட்டி பகுதியில், உற்பத்தி அதிகரிப்பால் தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

திண்டுக்கல்

சாணார்பட்டி வட்டாரத்தில் செங்குறிச்சி, கம்பிளியம்பட்டி, அஞ்சுகுளிப்பட்டி, வீரசின்னம்பட்டி, சாணார்பட்டி, ராஜக்காபட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தென்னந்தோப்புகள் அதிக அளவில் உள்ளன. கடந்த ஓராண்டாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், தேங்காய் உற்பத்தி வழக்கத்தை விட அதிகரித்துள்ளது.

கமிஷன் மண்டிகள் மூலம் நேரடியாக தோட்டங்களிலேயே தேங்காய்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. பின்னர் தொழிலாளர்களால் மட்டைகள் உரிக்கப்பட்டு, குறிப்பிட்ட எண்ணிக்கையில் சணல் சாக்குகளில் பேக்கிங் செய்யப்படுகிறது. அவை டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு தினமும் லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகிறது.

உற்பத்தி அதிகாிப்பால் தேங்காய் விலை தற்போது வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு தேங்காய் ரூ.8-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் தேங்காய் வெட்டும் கூலி, கமிஷன் போக ரூ.6 மட்டுமே விவசாயிகளுக்கு கிடைக்கிறது. தற்போது ஒரு கோழி முட்டை ரூ.6-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அந்த விலை தான், தேங்காய்க்கும் தற்போது கிடைக்கிறது என்று விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.


Next Story