ரூ.6½ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்


ரூ.6½ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
x

பரமத்திவேலூரில் ரூ.6½ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் போனது.

நாமக்கல்

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் கடந்த வாரம் வியாழக்கிழமை 7 ஆயிரத்து 620 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.90.19-க்கும், குறைந்தபட்சமாக ரூ.52.59-க்கும்‌, சராசரியாக ரூ.85.49-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.6 லட்சத்து 3 ஆயிரத்து 626-க்கு ஏலம் போனது. நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 7 ஆயிரத்து 480 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.94.69-க்கும், குறைந்தபட்சமாக ரூ.56.99-க்கும், சராசரியாக ரூ.94.29-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.6 லட்சத்து 61 ஆயிரத்து 917-க்கு விற்பனையானது. தேங்காய் பருப்பு விலை உயர்ந்துள்ளதால் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story