ரூ.6¾ லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்


ரூ.6¾ லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்
x

பரமத்திவேலூரில் ரூ.6¾ லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம் போனது.

நாமக்கல்

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வாரந்தோறும் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் வியாழக்கிழமை 7 ஆயிரத்து 15 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.85.59-க்கும், குறைந்தபட்சமாக ரூ.52.66-க்கும், சராசரியாக ரூ.81.25-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.5 லட்சத்து 27 ஆயிரத்து 854-க்கு ஏலம் போனது. நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 8 ஆயிரத்து 713 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.87.69-க்கும், குறைந்தபட்சமாக ரூ.52.66-க்கும், சராசரியாக ரூ.87.49-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.6 லட்சத்து 79 ஆயிரத்து 456-க்கு விற்பனையானது.


Next Story