ரூ.5 லட்சத்து 60 ஆயிரத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்


ரூ.5 லட்சத்து 60 ஆயிரத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
x

பரமத்திவேலூரில் ரூ.5 லட்சத்து 60 ஆயிரத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது.

நாமக்கல்

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது. கடந்த வாரம் வியாழக்கிழமை 8 ஆயிரத்து 155 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.83.69-க்கும், குறைந்தபட்சமாக ரூ.58.71-க்கும், சராசரியாக ரூ.81.99-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.5 லட்சத்து 85 ஆயிரத்து 587-க்கு ஏலம் போனது. நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 7 ஆயிரத்து 234 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.88.30-க்கும், குறைந்தபட்சமாக ரூ.55.80-க்கும், சராசரியாக ரூ.82.90-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.5 லட்சத்து 60 ஆயிரத்து 698-க்கு ஏலம் நடைபெற்றது.


Next Story