கொங்கணாபுரத்தில் தேங்காய் பருப்பு ரூ.5¼ லட்சத்துக்கு ஏலம்


கொங்கணாபுரத்தில் தேங்காய் பருப்பு ரூ.5¼ லட்சத்துக்கு ஏலம்
x
தினத்தந்தி 12 July 2023 6:45 PM GMT (Updated: 13 July 2023 11:11 AM GMT)

கொங்கணாபுரத்தில் தேங்காய் பருப்பு ரூ.5¼ லட்சத்துக்கு ஏலமிடபட்டது.

சேலம்

எடப்பாடி

கொங்கணாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற தேங்காய் பருப்பு பொது ஏலத்தில், விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்த 165 மூட்டை தேங்காய் பருப்புகள் ஏலம் விடப்பட்டன. இதில் ஆதார விலை திட்டத்தின் கீழ் தேங்காய் பருப்புகள் கிலோ ஒன்றுக்கு 108 ரூபாய் 60 பைசா என்ற விலையில் கொள்முதல் செய்யப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற பொது ஏலத்தில் முதல் தர தேங்காய் பருப்பு குவிண்டால் ஒன்றுக்கு (100 கிேலா) ரூ.7 ஆயிரத்து 75 முதல் ரூ.7 ஆயிரத்து 590 வரை விற்பனையானது. இரண்டாம் ரக தேங்காய் பருப்பு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரத்து 575 முதல் ரூ.7 ஆயிரத்து 65 வரை விற்பனையானது. நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு, இரண்டாம் ரக தேங்காய் பருப்புகளுக்கு சற்றே கூடுதலான விலை கிடைத்ததாக விவசாயிகள் தெரிவித்தனர். நாள் முழுவதும் நடைபெற்ற ஏலத்தில் ரூ.5 லட்சத்து 35 ஆயிரத்து 31 மதிப்பிலான தேங்காய் பருப்புகள் ஏலம் போனது.


Next Story