தர்மபுரி ஏல அங்காடியில் பட்டுக் கூடுகள் விலை அதிகரிப்பு


தர்மபுரி ஏல அங்காடியில் பட்டுக் கூடுகள் விலை அதிகரிப்பு
x
தினத்தந்தி 5 July 2023 7:00 PM GMT (Updated: 6 July 2023 7:30 AM GMT)
தர்மபுரி

தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 2,359 கிலோவாக இருந்த பட்டுக்கூடுகள் வரத்து தற்போது உற்பத்தி குறைந்ததால் நேற்று 1,693 கிலோவாக குறைந்தது.

நேற்று முன்தினம் அதிகபட்சமாக ரூ.457-க்கு விற்பனையான ஒரு கிலோ பட்டுக்கூடு நேற்று கிலோவிற்கு ரூ.35 விலை அதிகரித்தது. இதையடுத்து ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.492-க்கும், குறைந்தபட்சமாக ரூ.308-க்கும், சராசரியாக ரூ.417.71-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.7 லட்சத்து 7 ஆயிரத்து 300-க்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.


Next Story