தர்மபுரி ஏல அங்காடியில்ரூ.4 லட்சத்து 21 ஆயிரத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை


தர்மபுரி ஏல அங்காடியில்ரூ.4 லட்சத்து 21 ஆயிரத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை
x
தினத்தந்தி 6 July 2023 7:00 PM GMT (Updated: 6 July 2023 7:00 PM GMT)

தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். நேற்று முன்தினம் 1,693 கிலோவாக இருந்த பட்டுக்கூடுகள் வரத்து நேற்று 1,017 கிலோவாக குறைந்தது. 1 கிலோ அதிகபட்சமாக ரூ.492-க்கு விற்பனையான பட்டுக்கூடு நேற்று கிலோவிற்கு ரூ.17 அதிகரித்தது.

நேற்று ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.509-க்கும், குறைந்தபட்சமாக ரூ.310-க்கும், சராசரியாக ரூ.413.90-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.4 லட்சத்து 21 ஆயிரத்து 43-க்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.


Next Story