தர்மபுரி அங்காடியில்பட்டுக்கூடுகள் விலை அதிகரிப்பு


தர்மபுரி அங்காடியில்பட்டுக்கூடுகள் விலை அதிகரிப்பு
x
தினத்தந்தி 4 Aug 2023 7:00 PM GMT (Updated: 4 Aug 2023 7:01 PM GMT)
தர்மபுரி

தர்மபுரியில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பட்டு வளர்ச்சி துறை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று பட்டுக்கூடுவரத்து 3,549 கிலோவாக இருந்தது. பட்டுக்கூடுகளுக்கான தேவை அதிகரித்ததால் அதன் விலை நேற்று கணிசமாக அதிகரித்தது. ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.555-க்கும், குறைந்தபட்சமாக ரூ.272-க்கும், சராசரியாக ரூ.431.11-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.15 லட்சத்து 30 ஆயிரத்து 323-க்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.


Next Story