தர்மபுரி ஏல அங்காடியில் ரூ.6 லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை


தர்மபுரி ஏல அங்காடியில்  ரூ.6 லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை
x
தினத்தந்தி 22 Nov 2022 12:15 AM IST (Updated: 22 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் பட்டுக்கூடுகள் ஏல அங்காடி செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்த அங்காடிக்கு நேற்று 843 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. அதில் ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.832-க்கும், குறைந்தபட்சமாக ரூ.620-க்கும், சராசரியாக ரூ.731.64-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.6 லட்சத்து 17 ஆயிரத்து 28-க்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.

1 More update

Next Story