தர்மபுரி ஏல அங்காடியில்பட்டுக்கூடுகள் விலை உயர்வு


தர்மபுரி ஏல அங்காடியில்பட்டுக்கூடுகள் விலை உயர்வு
x
தினத்தந்தி 11 Feb 2023 7:00 PM GMT (Updated: 11 Feb 2023 7:00 PM GMT)
தர்மபுரி

தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் பட்டுக்கூடுகள் ஏல அங்காடி செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் 1,896 கிலோவாக இருந்த பட்டுக்கூடுகள் வரத்து நேற்று 881 கிலோவாக குறைந்தது. அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.740-க்கு விற்ற பட்டுக்கூடு கிலோவிற்கு ரூ.13 அதிகரித்தது. ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.753-க்கும், குறைந்தபட்சமாக ரூ.445-க்கும், சராசரியாக ரூ.706.33-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.6 லட்சத்து 22 ஆயிரத்து 772-க்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.


Next Story