சுதந்திர போராட்ட வீரர்களின் விவரங்கள் சேகரிப்பு


சுதந்திர போராட்ட வீரர்களின் விவரங்கள் சேகரிப்பு
x
தினத்தந்தி 6 Sep 2023 9:45 PM GMT (Updated: 6 Sep 2023 9:46 PM GMT)

தமிழகம் முழுவதும் சுதந்திர போராட்ட வீரர்களின் போராட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்படங்கள், விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

திண்டுக்கல்

நாடு சுதந்திரம் அடைவதற்கு தன்னுடைய இன்னுயிரை இழந்தவர்கள் ஏராளம். ஆங்கிலேயர்களின் பீரங்கிகளுக்கு அஞ்சாமல் அடக்கு முறைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு, சிறையில் சித்ரவதையை அனுபவித்து உயிரை விட்டவர்களும் பலர் உண்டு. அத்தகைய சுதந்திர போராட்ட வீரர்களின் ஒப்பற்ற தியாகத்தால் நாடு சுதந்திரம் பெற்றது. எனவே சுதந்திர போராட்ட வீரர்களை தமிழக அரசு பெருமைப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் சுதந்திர போராட்ட வீரர்களின் போராட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்படங்கள், விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.மேலும் சுதந்திர போராட்ட வீரர்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், கலெக்டர் அலுவலகத்தின் நுழைவுவாயில் அவர்களின் புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டு உள்ளன.

இதுமட்டுமின்றி சுதந்திர போராட்ட வீரர்களின் போராட்ட விவரங்களை சேகரித்து செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் மூலம் புத்தகம் தயாரிக்கப்பட உள்ளது. இதற்காக 29 சுதந்திர போராட்ட வீரர்களின் விவரங்களை சேகரிக்கும் முயற்சி நடக்கிறது. எனவே சுதந்திர போராட்ட வீரர்கள் தொடர்பாக விவரங்கள் தெரிந்தால் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்று செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜபூபதி தெரிவித்தார்.


Related Tags :
Next Story