தர்மபுரி மாவட்டத்தில், செல்வமகள் சேமிப்பு திட்டம் மூலம்106 பெண் குழந்தைகளுக்கு விருப்புரிமை நிதிகலெக்டர் வழங்கினார்


தர்மபுரி மாவட்டத்தில், செல்வமகள் சேமிப்பு திட்டம் மூலம்106 பெண் குழந்தைகளுக்கு விருப்புரிமை நிதிகலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 7 Aug 2023 12:30 AM IST (Updated: 7 Aug 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி மாவட்ட கலெக்டரின் விருப்புரிமை நிதியில் இருந்து செல்வமகள் சேமிப்பு திட்டம் மூலம் 106 பெண் குழந்தைகளுக்கு தலா ரூ.500 வீதம் சேமிப்பு கணக்கில் செலுத்தி சம்பந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களிடம் வங்கி கணக்கு புத்தகங்களை கலெக்டர் சாந்தி வழங்கினார்.

சேமிப்பு கணக்கு

தர்மபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 106 பெண் குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டனர். அந்த பெண் குழந்தைகளுக்கு அஞ்சலக சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டது. தர்மபுரி மாவட்ட கலெக்டரின் விருப்புரிமை நிதியிலிருந்து செல்வமகள் சேமிப்பு திட்டம் மூலம் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஒவ்வொரு மாணவிக்கும் தலா ரூ.500 வீதம் சேமிப்பு கணக்கில் செலுத்தப்பட்டது.

அந்த மாணவிகளின் பெற்றோர்களிடம் சேமிப்பு கணக்கு புத்தகங்களை கலெக்டர் சாந்தி நேரில் வழங்கி பாராட்டினர். ஒவ்வொரு மாணவியும் சேமிப்பு பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் குணசேகரன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மான்விழி, பென்னாகரம் வட்டார கல்வி அலுவலர் மணிகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பாராட்டு சான்றிதழ்

முன்னதாக தர்மபுரி மாவட்டத்தில் காமராஜர் பிறந்த தினமான கல்வி வளர்ச்சி தினத்தில் நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி, பட்டிமன்றம் மற்றும் கவிதை போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற 39 மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் சாந்தி வழங்கினார்.

இதனை தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்தில் விபத்தில் வருவாய் ஈட்டும் தாய் தந்தையரை இழந்த குழந்தைகளுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் ரூ.75 ஆயிரம் நிதி நல்லம்பள்ளி ஒன்றியத்தை சேர்ந்த 21 குழந்தைகளுக்கும், ஏரியூர் ஒன்றியத்தை சேர்ந்த ஒரு குழந்தைக்கும் என மொத்தம் 22 குழந்தைகளுக்கும் தலா ரூ.75,000- க்கான இட்டு வைப்பு நிதிப் பத்திரங்களை கலெக்டர் வழங்கினார்.

1 More update

Next Story