குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தமாற்றுத்திறனாளிக்கு உடனடியாக 3 சக்கர சைக்கிள்கலெக்டர் ஸ்ரேயா சிங் வழங்கினார்


குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தமாற்றுத்திறனாளிக்கு உடனடியாக 3 சக்கர சைக்கிள்கலெக்டர் ஸ்ரேயா சிங் வழங்கினார்
x
தினத்தந்தி 13 Feb 2023 7:00 PM GMT (Updated: 13 Feb 2023 7:00 PM GMT)
நாமக்கல்

நாமக்கல்லில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்த மாற்றுத்திறனாளிக்கு உடனடியாக 3 சக்கர சைக்கிளை கலெக்டர் ஸ்ரேயா சிங் வழங்கினார்.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி மொத்தம் 312 மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் வழங்கினர்.

இந்த மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் மனுக்களை பரிசீலனை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுலவர் மணிமேகலை மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

3 சக்கர சைக்கிள்

தொடர்ந்து அவர் தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று துறை அலுவலரிடம் வழங்கி, அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டார்.

இவற்றில் 3 சக்கர சைக்கிள் கோரி மனு அளித்த மாற்றுத்திறனாளி வெங்கடாசலம் என்பவரின் மனுவினை உடனடியாக பரிசீலனை செய்த கலெக்டர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ரூ.9 ஆயிரத்து 50 மதிப்பிலான 3 சக்கர சைக்கிளை உடனடியாக வழங்கினார்.


Next Story