ஊராட்சி பணிகளை முனைப்புடன் திறம்பட செய்து நிறைவேற்ற கலெக்டர் அறிவுரை


ஊராட்சி பணிகளை முனைப்புடன் திறம்பட செய்து நிறைவேற்ற கலெக்டர் அறிவுரை
x

ஊராட்சி பணிகளை முனைப்புடன் ெசய்து திறம்பட நிறைவேற்ற வேண்டும் என கலந்தாய்வு கூட்டத்தில் ஊராட்சி தலைவர்களுக்கு கலெக்டர் ஆலோசனை வழங்கி பேசினார்.

திருவண்ணாமலை


ஊராட்சி பணிகளை முனைப்புடன் ெசய்து திறம்பட நிறைவேற்ற வேண்டும் என கலந்தாய்வு கூட்டத்தில் ஊராட்சி தலைவர்களுக்கு கலெக்டர் ஆலோசனை வழங்கி பேசினார்.

கலந்தாய்வு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் அனைத்து கிராம ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு கிராம ஊராட்சி திட்டங்கள் மற்றும் நிர்வாகம் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு பணிகள் குறித்து அவர் விளக்கமாக பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், ''கிராம ஊராட்சிகளுக்கு ஊராட்சி மன்றத் தலைவர்கள் கட்டுப்பாட்டில் தான் பணிகள் ஒதுக்கப்படுகிறது. எனவே ஊராட்சி பணிகளை முனைப்புடன் ஊராட்சி மன்றத் தலைவர்கள் திறம்பட செய்து நிறைவேற்ற வேண்டும்.

நீடித்த மற்றும் நிலையான பல்வேறு வளர்ச்சி இலக்குகளை எட்டிவிடும் வகையில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக தற்போது ரூ.10 லட்சம் மற்றும் விருதுகள் வழங்கப்படுகிறது.

இதனை மாவட்ட மற்றும் மாநில அளவிலான தோ்வு குழுக்கள் பரிசீலனை செய்து அரசுக்கு முன்மொழிவு செய்யும்'' என்றார்.

பங்கேற்பு

கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) வீர்பிரதாப் சிங், உதவி கலெக்டர் (பயிற்சி) ரஷ்மிராணி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சரண்யாதேவி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story