அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் சேவையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு விரைவில் சரி செய்யப்படும் கலெக்டர் கார்மேகம் தகவல்


அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் சேவையில் ஏற்பட்ட  தொழில்நுட்ப கோளாறு விரைவில் சரி செய்யப்படும்  கலெக்டர் கார்மேகம் தகவல்
x

அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் சேவையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு விரைவில் சரி செய்யப்படும் என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

சேலம்

சேலம்,

சட்டவிரோதமாக செயலிழப்பு

இதுதொடர்பாக கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் சேவை மென்பொருளை பராமரித்து வரும் தனியார் நிறுவனத்தால் சட்டவிரோதமாக செயலிழப்பு செய்யப்பட்டதன் காரணமாக கடந்த 2 நாட்களாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேபிள் டி.வி. செட்டாப் பாக்ஸ்களின் கட்டுப்பாட்டு மென்பொருளை அத்துமீறி இணைய வழியில் நுழைந்து செயலிழப்பு செய்த நிறுவனத்தின் மீது குற்ற வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தகவல் தொழில்நுட்ப துறையின் தொழில்நுட்ப குழுவின் உதவியுடன் பாதிக்கும் மேற்பட்ட செட்டாப் பாக்ஸ்கள் தற்போது சரி செய்யப்பட்டுள்ளன. கேபிள் ஆபரேட்டர்கள் நேரடியாக செட்டாப் பாக்ஸ்களில் சில மாற்றங்களை செய்து அதை இயக்கும் தற்காலிக தீர்வு குறித்தும் விளக்கப்பட்டு, அந்த முறையிலும் இந்த சிக்கலுக்கு தற்காலிக தீர்வு காணப்பட்டுள்ளது.

விரைவில் சரிசெய்யப்படும்

தற்போது மென்பொருள்களை வழங்கிய முதன்மை நிறுவனத்துடன் அதை நேரடியாக பெறுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் இந்த தொழில்நுட்ப பிரச்சினைகள் சரி செய்யப்பட்டு சேவைகளை வழங்க அரசு கேபிள் டி.வி. நிறுவனம் முழுமூச்சுடன் செயல்பட்டு வருகிறது. இந்த தற்காலிக பிரச்சினையை சீரமைக்கும் வரை அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story