தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்


தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
x

சமூக நீதிக்காக தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்

திருவள்ளூர்,

சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பிக்கும் விதமாக சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது 1995-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சம் விருது தொகையும், ஒரு பவுன் தங்கப் பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இவ்விருதாளர் முதல்-அமைச்சரால் தேர்வு செய்யப்படுகிறார்.

2023-ம் ஆண்டிற்கான தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எனவே சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் தங்களது விண்ணப்பத்தினை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைக்கலாம்.

விண்ணப்பத்தில் தங்களது சுய விவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். விண்ணப்பத்தை 15-09-2023 தேதிக்குள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதினை பெற விரும்பும் நபர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.


Next Story