நெடுங்கல், பாரூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கலெக்டர் ஆய்வு


நெடுங்கல், பாரூர்  அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கலெக்டர் ஆய்வு
x

நெடுங்கல், பாரூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி ஆய்வு செய்தார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

நெடுங்கல், பாரூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் நெடுங்கல், பாரூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி திடீர் ஆய்வு செய்தார். அப்போது அங்கு நோயாளிகளின் வருகை பதிவேடு, கர்ப்பிணி மற்றும் பிரசவித்த தாய்மார்களுக்கு வழங்கப்பட்ட மருத்துவ சேவை பதிவேடு, குழந்தைகளுக்கான சிகிச்சைகள், வாரந்தோறும் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் குறித்த பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், கிராம சுகாதார செவிலியர்கள், கர்ப்பிணிகள் மற்றும் பிரசவித்த தாய்மார்களின் வீடுகளுக்கு நேரில் சென்று, அவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் குறித்து பெண்களிடம் கேட்டறிந்தார். மேலும் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோயாளிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் மருந்துகள் குறித்து டாக்டர்களிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.

அறிவுறுத்தல்

முதல் மற்றும் 2-ம் தவணை கொரோனா தடுப்பூசிகள், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களிடம் தடுப்பூசி செலுத்தி கொள்வதன் அவசியம் குறித்து விளக்கி கூற வேண்டும். மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும். இவர்களில் மேல் சிகிச்சை தேவைப்படுவோருக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என டாக்டர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, மருந்து பொருட்கள் இருப்பு, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மின்சார வசதி ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மருத்துவ அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.


Next Story