வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு


வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
x

வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ள அம்பாப்பூர் ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா ஆய்வு செய்தார். அப்போது அம்பாப்பூர் ஊராட்சியில் உள்ள செங்குடி கிராமத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டம், புதிய சாலைகள், செங்குழியில் அங்கன்வாடி புதிய கட்டிடம், அம்பலவர் கட்டளை கிராமத்தில் 100 நாள் வேலை திட்டம், செங்குழி மற்றும் உடையவர் தீயனூரில் ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படுகிறதா?, உடையவர் தீயனூரில் அங்கன்வாடிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். இதில் அம்பாப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் கலியபெருமாள், தா.பழூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story