வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணிகளை கலெக்டர் ஆய்வு


வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணிகளை கலெக்டர் ஆய்வு
x

வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணிகளை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில், மழைக்காலத்தையொட்டி வரத்து வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை கலெக்டர் மெர்சி ரம்யா நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது மழைக்காலத்திற்கு முன்னதாகவே வரத்துவாய்க்கால்கள் தூர்வாருவதின் மூலம் மழைக்காலங்களில் வரும் அதிகப்படியான மழைநீர் தேங்காமல் சீராக செல்வதற்கு வழிவகை ஏற்படும். மேலும் வரத்துவாய்க்கால்களில் அடைப்புகள் ஏற்படுவது தவிர்க்கப்படுவதுடன், அதிகப்படியான உபரிநீர்கள் அனைத்தும் வெளியேறும். எனவே இந்த பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். தொடர்ந்து புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வாகவாசல் ஊராட்சியில், வாகவாசல் - கேடயப்பட்டி சாலைப் பணி மற்றும் ராஜாப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின்கீழ் ரூ.28 லட்சம் மதிப்பீட்டிலான 2 வகுப்பறையுடன் கூடிய பள்ளிக் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது இப்பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வுகளின்போது, புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் ஷியாமளா, நகராட்சி பொறியாளர் இப்ராஹிம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேலு, ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.


Next Story