நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் கலெக்டர் திடீர் ஆய்வு

செங்கோட்டை அருகே நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் கலெக்டர் துரை ரவிச்சந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
செங்கோட்டை:
செங்கோட்டை அருகே உள்ள தேன்பொத்தையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு உள்ளது. இங்கிருந்து தான் செங்கோட்டை தாலுகாவில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அரிசி, பருப்பு, சீனி, பாமாயில் ஆகிய பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் நேற்று அந்த கிடங்குக்கு திடீரென சென்று ஆய்வு செய்தார். அப்போது அங்கு பணியாற்றும் தொழிலாளர்களிடம் உணவுப்பொருட்களின் தரம், இருப்பு குறித்தும், எடையளவு சரியாக உள்ளதா? என்பது குறித்தும் விவரங்களை கேட்டறிந்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





