செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ரேஷன் கார்டுகள் வழங்கிய கலெக்டர்


செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ரேஷன் கார்டுகள் வழங்கிய கலெக்டர்
x

செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ரேஷன் கார்டுகளை கலெக்டர் ராகுல்நாத் வழங்கினார்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சாலைவசதி, குடிநீர்வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு வகைப்பட்ட 259 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். பின்னர், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் 15 பயனாளிகளுக்கு மின்னனு குடும்ப ரேஷன் அட்டைகளையும் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வழங்கினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ், தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) (பொறுப்பு) லட்சுமணன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பேபி இந்திரா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.


Next Story