கல்லூரி ஆண்டு விழா


கல்லூரி ஆண்டு விழா
x

ஆலங்குளம் அருகே ஆலடி அருணா செவிலியர் கல்லூரி ஆண்டு விழா நடந்தது.

தென்காசி

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே ஆலடி அருணா செவிலியர் கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின் சேர்மன் டாக்டர் பாலாஜி தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் நிஷா வில்சன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக நெல்லை போலீஸ் கமிஷனர் அவினாஷ் குமார், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சுஷ்மா அவினாஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மருத்துவத்துறையில் செவிலியரின் பங்கு மற்றும் அவர்களின் அர்ப்பணிப்பு ஆகியவற்றை குறித்து கல்லூரி சேர்மன் டாக்டர் பாலாஜி பெருமையுடன் பேசினார். தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசினை வழங்கினார்.

விழாவில் மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. விழாவில் கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர். விழா முடிவில் பேராசிரியர் வசந்தி நன்றி கூறினார்.


Next Story