கல்லூரி தாளாளர் ஜாமீன் மனு தள்ளுபடி


கல்லூரி தாளாளர் ஜாமீன் மனு தள்ளுபடி
x

மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய கல்லூரி தாளாளர் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிப்புத்தூர்,

அருப்புக்கோட்டை தனியார் நர்சிங் கல்லூரி தாளாளர் டாஸ்வின் ஜான் கிரேஸ், இவர், கல்லூரி மாணவிகளிடம் செல்போனில் ஆபாசமாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் அவர் ஜாமீன் கேட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நேற்று நடைபெற்றது. முடிவில் இந்த மனுவை நீதிபதி கோபிநாத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


Next Story