கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x

விக்கிரமசிங்கபுரத்தில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் காமராஜர் நகர் தெருவை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 42). மில் தொழிலாளி. இவரது மகள் பவித்ரா (18). இவர் பாபநாசம் கல்லூரியில் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அங்கு இடம் கிடைக்காததால் அம்பை கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். தான் விருப்பப்பட்ட கல்லூரியில் படிக்க முடியவில்லை என்ற மன உளைச்சலில் அவர் இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இவரது பெற்றோர் தீபாவளிக்கு ஜவுளி எடுக்க நெல்லை சென்றிருந்தனர். இதனால் வீட்டில் தனியாக இருந்த பவித்ரா, சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து பவித்ராவின் தந்தை சண்முகவேல் கொடுத்த புகாரின் பேரில் விக்கிரமசிங்கபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

1 More update

Next Story