கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை


கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 19 Dec 2022 6:45 PM GMT (Updated: 19 Dec 2022 6:46 PM GMT)

குளச்சல் அருகே மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுக்காததால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

குளச்சல்,

குளச்சல் அருகே மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுக்காததால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கல்லூரி மாணவர்

குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள குறும்பனை வயல்காலனியை சேர்ந்தவர் மைக்கேல் ராஜ் (வயது53). கேரளாவில் மீன்பிடித்தொழில் செய்து வருகிறார். இவரது மகன் அஜேஸ்குமார் (18). இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.சி.ஏ. முதலாம் ஆண்டில் சேர்ந்தார். அங்கு ஒரு மாதம் வகுப்பிற்கு சென்ற பின்பு, படிக்க விருப்பமில்லாமல் ஊருக்கு திரும்பினார். பின்னர் கடலில் மீன் பிடிக்கும் தொழிலுக்கு சென்று வந்தார். இதற்கிடையே அஜேஸ்குமார் புதிய மோட்டார் ைசக்கிள் வாங்கி தரும்படி தாயாரிடம் கேட்டுள்ளார். அதற்கு, 'கேரளாவில் வேைலக்கு சென்றுள்ள தந்தை மைக்கேல்ராஜ் 2 நாளில் ஊருக்கு வந்தவுடன் வாங்கி தரலாம்' என தாயார் கூறினார்.

தூக்குப்போட்டு தற்கொலை

ஆனால், மோட்டார் சைக்கிள் கிடைக்காததால் அஜேஸ்குமார் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்தநிலையில் அஜேஸ்குமார் நேற்று முன்தினம் இரவு வீட்டில் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரது தாயார் ரெஜின் ஜெனட் குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story