வேன் மீது மோட்டார்சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் பலி


வேன் மீது மோட்டார்சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் பலி
x

வேன் மீது மோட்டார்சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் பலி

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி அருகே வேன் மீது மோட்டார்சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

கல்லூரி மாணவர்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள எழிலூர் நேமத்தை சேர்ந்தவர் கந்தசாமி. விவசாயி. இவரது மகன் கபிலன் (வயது 19). இவர் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தண்டலச்சேரி அரசு கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மதியம் கபிலன் தனது நண்பர் அதே கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் திருத்துறைப்பூண்டி மன்னார்குடி சாலையை சேர்ந்த விஜய்சங்கர் (19) என்பவருடன் மோட்டார்சைக்கிளில் திருத்துறைப்பூண்டிக்கு வந்து கொண்டிருந்தனர்.

வேன் மீது மோட்டார்சைக்கிள் மோதல்

அப்போது தண்டலச்சேரி கல்லூரி அருகில் எதிரே வந்த வேன் மீது எதிர்பாராதவி்தமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் கபிலன், விஜய் சங்கர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதில் சம்பவ இடத்திலேயே கபிலன் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த விஜய் சங்கரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

உயிரிழந்த கபிலனின் உடல் திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story