கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி


கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி
x
தினத்தந்தி 21 Jun 2022 5:26 PM GMT (Updated: 21 Jun 2022 5:29 PM GMT)

திண்டுக்கல் அருகே கிணற்றில் முழ்கி கல்லூரி மாணவர் பலியானார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் ஆர்.எம்.காலனியை அடுத்துள்ள ராமநாதபுரத்தை சேர்ந்தவர் அருளானந்தம் சேகர். இவரது மகன் அமலநாதன் (வயது 18). இவர் திண்டுக்கல் என்.எஸ்.நகர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.பார்ம். முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்தநிலையில் வழக்கம்போல் கல்லூரிக்கு சென்ற அமலநாதன், கல்லூரி முடிந்த பிறகு தனது நண்பர்களை பார்ப்பதற்காக ஆர்.வி.எஸ்.நகர் பகுதிக்கு சென்றார். அப்போது அங்குள்ள 60 அடி ஆழ கிணற்றில் நண்பர்களுடன் சேர்ந்து அவர் குளித்து கொண்டிருந்தார். இதில் எதிர்பாராதவிதமாக அமலநாதன் நீரில் மூழ்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதற்கிடையே நீரில் மூழ்கி அமலநாதன் பலியானார்.

இதுகுறித்து திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு நண்பர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படைவீரர்கள் நீரில் மூழ்கிய அமலநாதனின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story