கல்லூரி மாணவர் பலி


கல்லூரி மாணவர் பலி
x

கல்லூரி மாணவர் விபத்தில் பலியானார்

திருநெல்வேலி

மானூர்:

கங்கைகொண்டான் அருகே உள்ள மேட்டுப்பிராஞ்சேரியைச் சேர்ந்தவர் மணிவேல் மகன் அரவிந்த் (வயது 18). இவர் பேட்டையிலுள்ள கல்லூரியில் பி.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவரது உறவினர் பருத்திகுளத்தைச் சேர்ந்த கதிர்வேல் மகன் சுப்பிரமணியன் (22).அவரது நண்பரின் மோட்டார்சைக்கிளை வாங்கி அதை ஓட்ட, அரவிந்த் பின்னால் அமர்ந்து கீழத்தென்கலத்திலுள்ள தனது ஆசிரியரை பார்த்துவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். தென்கலம் - பள்ளிக்கோட்டை ரோட்டில் செல்லும்போது அடையாளம் தெரியாத வாகனம் இவர்களின் மோட்டார்சைக்கிளில் மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே அரவிந்த் இறந்து போனார். காயமடைந்த சுப்பிரமணியன் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இது குறித்து அரவிந்தனின் மாமா ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story