கல்லூரி மாணவர் பலி


கல்லூரி மாணவர் பலி
x

பஸ்சில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே உள்ள பில்லமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் அமரேசன் (வயது 19). இவர், திண்டுக்கல் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று இவர், திண்டுக்கல்லில் இருந்து தனியார் பஸ்சில் பில்லமநாயக்கன்பட்டிக்கு சென்றார். அவர் படியில் நின்று பயணம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது பில்லமநாயக்கன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது திடீரென அமரேசன் பஸ்சில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story