மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பலி


மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பலி
x
தினத்தந்தி 6 Jun 2023 7:15 PM GMT (Updated: 7 Jun 2023 6:49 AM GMT)

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர் பரிதாபமாக பலியானார்.

கன்னியாகுமரி

மணவாளக்குறிச்சி:

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர் பரிதாபமாக பலியானார்.

பாலிடெக்னிக் மாணவர்

மணவாளக்குறிச்சி அருகே கடியபட்டணம் புனித சவேரியார் தெருவை சேர்ந்தவர் ஜோஸ்ராஜ், மீன்பிடித்தொழில் செய்து வருகிறார்.

இவருடைய மகன் சகாய அஜய் (வயது 22). இவர் வெள்ளமோடியில் ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று பிற்பகல் சகாய அஜய் தனது மோட்டார் சைக்கிளில் குளச்சலுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அதன்படி அவர் கூட்டுமங்கலம் பகுதியில் சென்றபோது திடீரென நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தார்.

பரிதாப சாவு

இதில் சகாய அஜய் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதினார். இதனால் தலையில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சகாய அஜய் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அவரது தாயார் ஜூலியட் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பெருமாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பாலிடெக்னிக் மாணவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story