கல்லூரி மாணவி மாயம்


கல்லூரி மாணவி மாயம்
x

கல்லூரி மாணவி மாயம் ஆனார்.

கரூர்

தோகைமலை அருகே உள்ள செ.கல்லிப்பட்டியை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி முருகாயி. இந்த தம்பதியின் மகள் சிவரஞ்சனி (வயது 19). இவர் அய்யர்மலை அரசு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்று சிவரஞ்சனி மாலை வெகுநேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து உறவினர் வீடுகள் மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து முருகாயி கொடுத்த புகாரின்பேரில், தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து மாயமான சிவரஞ்சனியை தேடி வருகின்றனர்.


Next Story