கல்லூரி மாணவி மாயம்


கல்லூரி மாணவி மாயம்
x

கல்லூரி மாணவி மாயம் ஆனார்.

கரூர்

தவுட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி கல்யாணி. இந்த தம்பதியின் மகள் ஹர்சினி (வயது 17). இவர் புன்னம் சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் செவிலியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் கல்லூரிக்கு சென்று வருவதாக ஹர்சினி கூறி விட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் இரவு வெகுநேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை.

இதையடுத்து அவரது பெற்றோர்கள் கல்லூரிக்குச் சென்று விசாரித்த போது அவர் கல்லூரிக்கு வரவில்லை என்று கூறியுள்ளனர். இதையடுத்து உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து கல்யாணி கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிந்து மாயமான ஹர்சினியை தேடி வருகின்றனர்.


Next Story