தியாகதுருகத்தில்கல்லூரி மாணவி மாயம்போலீசார் விசாரணை
தியாகதுருகத்தில் இருந்து கல்லூரிக்கு சென்ற மாணவி மாயமானார்.
கள்ளக்குறிச்சி
தியாகதுருகம்,
தியாகதுருகம் பெரியமாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் 19 வயது மாணவி. கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.இ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று காலை வழக்கம் போல் கல்லூரிக்குச் சென்ற மாணவி மாலை வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் தங்களது மகளை உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடினர். இருப்பினும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் பதறிய பெற்றோர் மாயமான மகளை கண்டுபிடித்து தரக்கோரி தியாகதுருகம் போலீசில் புகார் கொடுத்தனர். அந்த புகாரில் பெரியமாம்பட்டு பகுதியை சேர்ந்த 5 பேர் தங்களது மகளை கடத்திச் சென்றிருக்கலாம் என தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் விசாரணை நடத்தி வருவதுடன், மாயமான மாணவியையும் தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story