சின்னசேலம் அருகே27-ந்தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் கல்லூரி மாணவி மாயம்போலீசார் விசாரணை


சின்னசேலம் அருகே27-ந்தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் கல்லூரி மாணவி மாயம்போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 23 March 2023 6:45 PM GMT (Updated: 23 March 2023 6:46 PM GMT)

சின்னசேலம் அருகே 27-ந்தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் கல்லூரி மாணவி திடீரென மாயமானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்,

கர்நாடக மாநிலம் பெங்களூர் கிருஷ்ணராஜ் லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர் 21 வயது மாணவி. இவர் சின்னசேலம் அடுத்த இந்திலி கிராமத்தில் உள்ள பெரியம்மா வீட்டில் தங்கி, சேலத்தில் உள்ள ஒரு தனியார் கலை, அறிவியல் கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கும் பக்கத்து கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு, வருகிற 27-ந்தேதி திருமணம் நடைபெற இருந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று காலை கல்லூரிக்கு சென்ற மாணவி, அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும், மாணவி பற்றி எந்த தகவலும் இல்லை. இதுகுறித்த புகாரின்பேரில் சின்னசேலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.


Next Story