கல்லூரி மாணவி மாயம்

கல்லூரி மாணவி மாயமானார்.
அரியலூர் மாவட்டம், சின்னவளையம் கீழத்தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மகள் சரண்யா (வயது 18). இவர் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி இரவு சாப்பிட்டு விட்டு தாத்தா வீட்டில் தூங்க செல்வதாக கூறிச்சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தந்தை தனது மகளை அக்கம் பக்கத்திலும், உறவினர்கள், தோழிகள் வீடு என பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் அவர் இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





