விழுப்புரம் அருகே கல்லூரி மாணவி மாயம் போலீசார் விசாரணை


விழுப்புரம் அருகே கல்லூரி மாணவி மாயம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 2 April 2023 6:45 PM GMT (Updated: 2 April 2023 6:47 PM GMT)

விழுப்புரம் அருகே கல்லூரி மாணவி மாயமானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம்


விழுப்புரம், ஏப்.3-

விழுப்புரம் அருகே உள்ள திருப்பாச்சனூரை சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் பிருந்தா (வயது 19). இவர் விழுப்புரம் அரசு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிருந்தா கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story