திண்டிவனம் அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம் ஆம்புலன்சுகள் மூலம் சென்னை, கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்டது


திண்டிவனம் அருகே சாலை விபத்தில்    மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்    ஆம்புலன்சுகள் மூலம் சென்னை, கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்டது
x

திண்டிவனம் அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அவை போக்குவரத்து சீர்செய்யப்பட்டு ஆம்புலன்சுகள் மூலம் சென்னை, கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்டது.

விழுப்புரம்

மயிலம்,

கல்லூரி மாணவர் மூளைச்சாவு

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள வெளியனூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 19). பொறியியல் கல்லூரி மாணவரான இவர் தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த சிபி என்பவருடன் கடந்த 10-ந் தேதி ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது திண்டிவனம் அருகே விளங்கம்பாடி என்ற இடத்தில் அவர்களது மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது.

இந்த விபத்தில் சிபி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த சரவணன் மிகவும் கவலைக்கிடமான நிலையில் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று சரவணன் மூளைச்சாவு அடைந்தார்.

உடல் உறுப்புகள் தானம்

இதனையடுத்து பெற்றோரின் சம்மதத்துடன் மாணவர் சரவணனின் உடல் உறுப்புகளான இருதயம், கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்டவை தானமாக வழங்கப்பட்டது. அவ்வாறு தானமாக வழங்கப்பட்ட சரவணனின் உடல் உறுப்புகள் சென்னை, கேரளாவில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்காக சென்னை, கேரளா செல்லும் வழிகளில் போலீசாரால் போக்குவரத்து சீர்செய்யப்பட்டு எந்தவித இடையூறும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளப்பட்டது. பின்னர் மாணவர் சரவணனின் உடல் உறுப்புகள் ஆம்புலன்ஸ் வாகனங்களில் ஏற்றப்பட்டு சென்னை, கேரளாவிற்கு விரைவாக கொண்டு செல்லப்பட்டது. கல்லூரி மாணவர் சரவணனின் உடல் உறுப்புகளால் தற்போது 4 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story