கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் தாளாளர் கைது


கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் தாளாளர் கைது
x
தினத்தந்தி 9 Jun 2023 6:45 PM GMT (Updated: 9 Jun 2023 6:46 PM GMT)

தென்காசியில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாளாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

தென்காசி

தென்காசியில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாளாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை

தென்காசி பகுதியில் உள்ள தனியார் பாராமெடிக்கல் கல்லூரியில், சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் தாளாளராக முகமது அன்சாரி உள்ளார்.

இவர் நேற்று முன்தினம் அந்த கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் பயிலும் 17 வயதான 2-ம் ஆண்டு மாணவியை தனது அறைக்கு வரவழைத்து ஆபாசமாக பேசி, தவறாக நடக்க முயன்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

தாளாளர் கைது

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சலிட்டவாறு அந்த அறையில் இருந்து வெளியேறி, தனது வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் தெரிவித்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில், குற்றாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கல்லூரி தாளாளர் முகமது அன்சாரியை கைது செய்தார்.


Next Story