அரசு பஸ்சில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு; கண்டக்டர் கைது


அரசு பஸ்சில் கல்லூரி மாணவிக்கு  பாலியல் தொந்தரவு; கண்டக்டர் கைது
x

அரசு பஸ்சில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு; கண்டக்டர் கைது

மதுரை


மதுரை கூடல்நகர், சொக்கலிங்கநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 42), இவர் பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து ஆரப்பாளையம் வழியாக மாட்டுத்தாவணி செல்லும் டவுன் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். 17 வயது மாணவி ஒருவர், அந்த பஸ்சில் கல்லூரி சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

கண்டக்டர் பாலமுருகன், அந்த மாணவியிடம் பேச்சு கொடுத்துள்ளார். நாளடைவில் பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மாணவியை அவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மாணவி கண்டித்தும் அவர் கண்டு கொள்ளவில்லை.

இதுகுறித்து அறிந்த மாணவியின் அண்ணன், கண்டக்டரிடம் விசாரித்தபோது 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அவரை பாலமுருகன் சரமாரியாக தாக்கி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அதில் படுகாயம் அடைந்த மாணவியின் அண்ணன் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

அதை தொடர்ந்து மாணவி, தெற்கு மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை மேற்கொண்டு, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கண்டக்டர் பாலமுருகனை கைது செய்தனர்.


Next Story