தூக்குப்போட்டு கல்லூரி மாணவர் தற்கொலை


தூக்குப்போட்டு கல்லூரி மாணவர் தற்கொலை
x

ஒரத்தநாடு அருகே தூக்குப்போட்டு கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

தஞ்சாவூர்

ஒரத்தநாடு;

ஒரத்தநாட்டை அடுத்துள்ள தென்னமநாடு நடுத்தெருவை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் தீபக் (வயது18). இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி 2-ம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று தீபக் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இவரை அவரது குடும்பத்தினர் மீட்டு ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக அவர் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வந்த தீபக் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து தீபக்கின் தந்தை விஜயகுமார் கொடுத்த புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவர் தீபக் ஏன்? தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். என விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story