கல்லூரி மாணவி தற்கொலை


கல்லூரி மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 14 Feb 2023 6:45 PM GMT (Updated: 14 Feb 2023 6:46 PM GMT)

கல்லூரி மாணவி தற்கொலை

கோயம்புத்தூர்

துடியலூர்

காதலர் தினத்தில் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டார். இது தொட்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி மாணவி

கோவை துடியலூர் அருகில் உள்ள ஜி.என்.மில்ஸ் உருமாண்டம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார்-அமுதவல்லி. இவர்களது மகள் ஸ்ரீ வர்ஷா (வயது 20). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.ஏ. (இலக்கியம்) படித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து அவரது தாய் அமுதவல்லி, ஸ்ரீ வர்ஷாவுக்கு திருமணம் செய்வதற்காக உறவினர் ஒருவரின் ஜாதகத்தை காண்பித்து பேசி உள்ளனர். இதனை விரும்பாத வர்ஷா திருமணத்துக்கு மறுத்து உள்ளார். இதனால் தாய், மகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. தன்னிடம் இப்போதைக்கு திருமணம் குறித்து பேசவேண்டாம் என்று கூறி உள்ளார்.

விஷம் குடித்து தற்கொலை

ஆனால் வீட்டில் அவரது பேச்சை கேட்காமல் மகளுக்கு திருமணம் செய்து விட வேண்டும் என்கிற ஆர்வத்தில் அதற்கான வேலைகளை செய்துள்ளனர்.இந்தநிலையில் வீட்டில் யாரிடமும் பேசாமல் வர்ஷா இருந்துள்ளார்.

மேலும் மனம் உடைந்த நிலையில் காணப்பட்ட அவர் காதலர் தினமான நேற்று வீட்டில் இருந்த போது, சாணிப்பவுடரை (விஷம்) வாங்கி குடித்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஸ்ரீ வர்ஷா இறந்தார்.

இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். காதல் தினத்தன்று கல்லூரி மாணவி இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



Next Story